மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடைநிறுத்தம் - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 21, 2016

மு.கா.விலிருந்து இரண்டு மௌலவிகள் இடைநிறுத்தம்

சதித்திட்டம் தீட்டினார்களாம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள் இருவர் பத­வி­யி­லி­ருந்தும் கட்­சி­யினால் இடை நிறுத்­தப்­ப­ட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்­சியின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் அதி­கா­ரங்கள் கட்சித் தலை­மைத்­து­வத்­தினால் குறைக்­கப்­பட்­ட­மைக்கு இவர்கள் எதிர்ப்பு தெரி­வித்­த­மையே இதற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தெல்­தோட்­டையைச் சேர்ந்த மௌலவி எச்.எம்.எம்.இல்­லியாஸ் மற்றும் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த மௌலவி ஏ.எல்.எம்.கலீல் ஆகிய இரு­வ­ருமே இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். கட்­சியின் செய­லாளர் மன்சூர் ஏ காத­ரினால் மௌலவி எச்.எம்.எம்.இல்­யா­ஸுக்கு இடை­நி­றுத்தக் கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.


இதே­வேளை சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.கலீல் தானும் அர­சியல் உயர்­பீட பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டாலும் இது­வரை தனக்கு அவ்­வா­றான கடிதம் கிடைக்­க­பெ­ற­வில்லை என ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்தார். 

இது தொடர்பில் ‘விடி­வெள்ளி’ மௌலவி எச்.எம்.எம். இல்­லி­யாஸைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.

‘கடந்த சனிக்­கி­ழமை பால­மு­னையில் நடை­பெற்ற ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 19ஆவது தேசிய மாநாட்­டுக்குச் சென்­றி­ருந்தேன். மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்­பிய போது எமக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. நான் கட்­சியின் அர­சியல் உயர் பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்தேன்.

நான் பால­முனை தேசிய மாநாட்­டுக்­காக எங்கள் ஊரி­லி­ருந்து பஸ் ஒன்றில் 45 பேரை அழைத்துச் சென்­றி­ருந்தேன். மேடை­யிலும் அமர்ந்­தி­ருந்தேன். கட்­சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இரு­வரை உயர்­பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து விலக்­கி­யுள்­ள­தாக பகி­ரங்­க­மாக கூறினார்.

கட்­சியின் செய­லாளர் நாயகம் ஹசன் அலியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டதை எதிர்த்து கட்­சியின் தலை­வ­ருக்கு கடிதம் ஒன்று எழு­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக ஹசன் அலி எனது வீட்­டுக்கு வருகை தந்து கலந்­து­ரை­யா­டினார்.

கடி­தத்தில் நானும் 19ஆவது நப­ராக கையொப்­ப­மிட்டேன். எனக்கு முன்­ப­தாக 18 பேர் கையொப்­ப­மிட்­டி­ருந்­தனர். ஆனால் ஏனை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­ப்படாது 19 ஆவது நப­ராக கையொப்­ப­மிட்­டுள்ள எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்­டி­ருந்த எனக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நான் கவ­லை­ய­டை­கிறேன் என்றார்.

இதே­வேளை தேசிய மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியும் கலந்துகொள்ளவில்லை.

ஹசன் அலிக்கு எதிராக என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பபட வேண்டுமென்பது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here