ஹசன் அலி மீதான நடவடிக்கை குறித்து உயர்பீடம் தீர்மானிக்கும் - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 21, 2016

ஹசன் அலி மீதான நடவடிக்கை குறித்து உயர்பீடம் தீர்மானிக்கும்

மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

கட்­சியின்  செயற்­பா­டுகள் தொடர்பில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் அது தொடர்பில் கட்­சி­யி­னுள்ளே பேசித்­தீர்த்­துக்­கொள்ள முடியும்.

கட்­சிக்கு வெளியே விமர்­சிப்­ப­தாலோ தலை­மையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வ­தாலோ எந்­தப்­ப­ய­னு­மில்­லை­யென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் தேசிய நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மு.கா. வின் பொதுச்­செ­ய­லாளர் தேசிய மாநாட்டில் பங்­கு­பற்­றாமை தொடர்பில் அவ­சி­ய­மேற்­படின் கட்­சியின் உயர்­பீடம் தீர்­மா­னிக்­கு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.


சர்­வ­தேச நீர் ­தினம் தொடர்­பான ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று திங்­கட்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்­றது. இதன்­போது தேசிய மாநாட்டில் பொதுச்­செ­ய­லாளர் பங்­கேற்­காமை, அதனை தொடர்ந்து ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் தொடர்­பாக ஊட­க­வி­லா­ளர்­கள் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே அமைச்சர்  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் கூறு­கையில்,
அனைத்துக் கட்­சி­க­ளுக்­குள்ளும்     பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. எதிர்க்­கட்­சி­யினுள் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

ஜன­நா­ய­கத்தை மதிக்கும், பேணும் கட்­சி­யா­கவே மு.கா.  உள்­ளது. ஆகவே கட்­சியின் செயற்­பா­டுகள் குறித்து பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் அவை தொடர்­பாக கட்­சிக்­குள்­ளேயே பேசித்­தீர்ப்­ப­தற்­கான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. கட்­சியின் தலை­மையை விமர்­சிக்கும் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தாலோ அல்­லது சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வ­தாலோ எவ்­வி­த­மான நன்­மை­களும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. 
நட­வ­டிக்கை

மாநாட்­டுக்கு  வரா­த­வர்கள் தொடர்­பாக நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மென்றால் அதனை கட்சி தீர்­மா­னிக்கும். தமக்­கென்று தனிப்­பட்ட உள்­கா­ர­ணங்கள் காணப்­ப­டா­தி­ருக்­கு­மா­க­வி­ருந்தால் கட்­சியின் தேசிய மாநாட்­டிற்கு வருகை தந்­தி­ருக்க முடியும். ஆனால் அவ்­வா­றான செயற்­பாட்டை அவர்கள் செய்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில் அவர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பதா இல்­லையா என்­பது குறித்து கட்­சியின் உயர்­பீடம் விரைவில் தீர்­மா­ன­மெ­டுக்கும்.

பொதுச் ­செ­ய­லா­ளரின் அதி­காரம்
மு.கா. வின் பொதுச்­செ­ய­லா­ள­ருக்கு அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அவ­ருக்கு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் அதனை கட்­சிக்­குள்­ளேயே பேசித்­தீர்த்­துக்­கொண்­டி­ருக்க முடியும். அது தொடர்­பாக பகி­ரங்க கருத்­துக்­களை வெளி­யி­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஜன­நா­ய­கத்தை பேணும் கட்­சி­யென்ற அடிப்­ப­டையில் அவ­ரு­டைய பிரச்­சி­னையை கட்­சிக்­குள்ளே தீர்ப்­ப­தற்­கான நிலை­மைகள் உள்­ளன. ஆகவே அவர் கட்­சி­யினுள் பேசாது வெளியில் பேசு­வதில் பய­னில்லை. 

 குற்­றச்­சாட்டு
நாம் இஸ்­லா­மிய கலா­சா­ரங்­களை பாது­காப்­ப­தோடு அவற்றை மிகவும் உயர்ந்த மட்­டத்தில் மதிக்­கின்றோம். அதே­போன்று ஏனைய கலா­சா­ரங்­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும். 

தற்­போது நாட்டில் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்­பாக பேசப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்த நாட்டில் காணப்­படும் கலா­சா­ரங்­க­ளுக்கு  மதிப்­ப­ளிக்­க­வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மான தொன்­றா­கின்­றது. அவ்­வா­றான நிலையில் அதில் தவ­றுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. 

முஸ்லிம் சமு­கத்­தினுள் தேவை­யற்ற கருத்­துக்­களால் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயலும் சில தரப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அவை இவ்­வா­றான கருத்­துக்­களை பிர­சாரம் செய்­கின்­றன. அது முற்­றிலும் தவ­றா­னது. 

உதா­ர­ண­மாக ஒரு விட­யத்தை உங்­க­ளுக்கு கூறு­கின்றேன். அந்த மாநாட்டில் ஆதி­வா­சி­களின் நடனம் இடம்­பெற்­றது. அது ஆதி­வா­சி­களின் கலா­சாரம். அதனை நாம் மதிக்­க­வேண்­டிய கடப்­பாட்­டைக்­கொண்­டி­ருக்­கின்றோம். 

ஆதி­வா­சி­களின் மர­பொன்று காணப்­ப­டு­கின்­றது. அரச தலைவர் வருகை தரும்­போது அவ­ருக்கு ஆசீர்­வாதம் வேண்டி அவர்­களின் பூர்­வீக தெய்­வ­மான மலை­க­ட­வுளை வழி­ப­டு­வார்கள். அதன்­பின்னர் தேன் முட்­டி­யுடன் அரச தலை­வரை சந்­தித்து அவ­ருக்­கான கௌர­வத்­தை­ய­ளித்து மலைக்­க­ட­வுளின் ஆசீர்­வா­தத்­தையும் வழங்­கு­வார்கள். 

இது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில் ஆதி­வா­சி­களின் கோரிக்­கை­க­ளை­யேற்று நாம் அவர்­க­ளுக்­கான குடி­நீர்ப்­பி­ரச்­சி­னையை தீர்த்து வைத்தோம். அதற்­காக எமக்கும் ஜனா­தி­ப­திக்கும் நன்றி செலுத்­த­வேண்­டு­மென அவர்கள் கோரி­ய­தா­லேயே அம்­மா­நாட்டின் ஊடாக அவர்­க­ளுக்­கான வாய்ப்­பொன்றைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்தோம். அது தவ­றா­ன­தொரு விடயம் இல்­லை­யல்­லவா?

எல்லை நிர்­ணயம்
எல்லை நிர்­ணயம் தொடர்­பான பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக  நாம் பல­மட்டக் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அச்­செ­யற்­பாட்டை தொடர்ச்­சி­யாக மேற்­கொள்வோம். விரைவில் இறுதி தீர்­மா­னத்தை அறி­விப்போம். 

மஹிந்­த­வுக்கு ஆத­ரவில்லை
முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஸ புதிய அர­சியல் கட்­சி­யொன்றை ஆரம்­பித்தால் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. கடந்த காலத்தில் நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூகம் பல நெருக்­க­டி­க­ளுக்கு முகங்கொடுத்தது.

அதற்கான எதிர்ப்புக்களையும் நாம் வெளியிட்டிருந்தோம்.
யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்தவொரு சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆனால் யுத்தமொன்றை நிறைவு செய்து மற்றுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். அந்தக்கொள்கைக்கு எதிராகவே நாம் புதிய மாற்றத்திற்கான தீர்மானத்தை எடுத்தோம்.

தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர  ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு அனைவருடனும் இணைந்து பயணத்தை தொடர்வோம் என்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here