டில்ஷானின் ஆட்டமிழப்பு பேரிழப்பு ; எமது களத்தடுப்பும் மோசமாக இருந்தது – ஏஞ்சலோ மெத்யூஸ் - Maliga News

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 21, 2016

டில்ஷானின் ஆட்டமிழப்பு பேரிழப்பு ; எமது களத்தடுப்பும் மோசமாக இருந்தது – ஏஞ்சலோ மெத்யூஸ்


''மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான போட்­டி யில் நாங்கள் 20 முதல் 30 ஓட்­டங்­க ளைக் குறை­வாக எடுத்தோம். அத்­துடன் களத்­த­டுப்பு படு­மோ­ச­மாக இருந்­தது'' என இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத் யூஸ் தெரி­வித்தார்.

பெங்­களூர் சின்­ன­சு­வாமி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று முன்தினம் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான போட்­டியில் அடைந்த தோல்­விக்­கான கார­ணத்தை ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

''இப்போட்­டியில் 150 ஓட்­டங்­களைப் பெற வேண்டும் என்ற இலக்­குடன் களம் இறங்­கினோம். ஆனால், நாங்கள் 20 முதல் 30 ஓட்­டங்கள் குறை­வாக எடுத்தோம்.


எமது களத்­த­டுப்பு மிக மோச­மாக இருந்­தது. எமது முன்­வ­ரி­சையும் காலை வாரி­யது. இந்த நாள் எங்­க­ளுக்கு மிகவும் சிர­ம­மாக இருந்­தது'' என்றார்.

உபாதை கார­ண­மாக களத்­த­டுப்­பின்­போது வெளி­யே­றி­யதால் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீர­ராக களம் இறங்­க­மாட்டார் என்­பதை அறிந்­ததால் என்ன மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நினைத்­தீர்கள் எனக் கேட்­ட­போது, ''கெய்ல் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக களம் இறங்­க­மாட்டார் என்­ப­தாலும் 10. 12 ஓவர்கள் வரை அவரால் களம் இறங்க முடி­யாது என்­ப­தாலும் மூன்­றா­வது ஓவ­ரி­லி­ருந்து சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­களை பந்­து­ வீச அழைத்தேன். வெண்­டர்சே திற­மை­யாக பந்து­வீ­சினார்.

மற்­றை­ய­வர்­களும் பந்­து­வீச்சில் திற­மை­யாக செயற்­பட்­டனர். ஆனால் களத்­த­டுப்பு மிகவும் மோசம். பயிற்­சி­க­ளின்­போது திற­மையை வெளிப்­ப­டுத்­து­ப­வர்கள் முக்­கிய போட்­டி­யின்­போது கோட்டை விட்­டு­வி­டு­கின்­றனர்'' என்றார்.

தில­க­ரட்ன டில்ஷான் ஆட்­ட­மி­ழந்த விதம் குறித்து கேட்­ட­போது,
''மத்­தி­யஸ்­தரின் தீர்ப்பே மகே­சனின் தீர்ப்பு. அது குறித்து விமர்­சிக்­கவோ கருத் துக் கூறவோ முடி­யாது. ஆனால், அந்த ஆட்­ட­மி­ழப்பு எமக்கு பேரி­ழப்­பா­கவும் துர­தி­ருஷ்­ட­வ­ச­மா­கவும் அமைந்­தது” என பதி­ல­ளித்தார்.

''முன்­வ­ரிசை வீரர்கள் குறைந்த எண்­ணிக்­கை­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­ததால் மத்­திய வரி­சையில் நல்ல இணைப்­பாட்­டத்தை ஏற்­ப­டுத் தும் பொருட்டு நானும் திசர பெரே­ராவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க நேரிட்டது.

குறிப்பாக திசர பெரேரா திறமையாக துடுப் பெடுத்தாடியிருந்தார், எனினும் எங்களால் கணிசமான ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது'' எனவும் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here